நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் இணைந்து சரவாக் மாநில பணியாற்ற தயாராக உள்ளது: அபாங் ஜோ தகவல் 

கூச்சிங்: 

சரவாக் மாநில அரசாங்கம் நாட்டின் தேசிய எரிவாயு, எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என்று சரவாக் மாநில பிரிமியர் டான்ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒப்பெங் கூறினார். 

சரவாக் மாநில அரசாங்கம் பெட்ரோனாஸ் நிறுவனத்தை சீர்குலைக்கவும் அல்லது துண்டிக்கவும் எந்தவொரு திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. 

சரவாக் மாநிலத்தின் எரிவாயு, எண்ணெய் வர்த்தக அடைவுநிலையால் மலேசியா பெரும் நன்மை அடைந்துள்ளதாக அபாங் ஜோ சொன்னார். 

எரிவாயு, எண்ணெய் விவகாரத்தில் சரவாக் மாநில  அரசாங்கத்தின் நிலைப்பாட்டினைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புரிந்து கொண்டுள்ளதாக சரவாக் பிரிமியர் குறிப்பிட்டார். 

முன்னதாக பெட்ரோனாஸ் நிறுவனத்தை துண்டிக்கவும் அல்லது அதனை அழிக்கவும் சரவாக் மாநில அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset