
செய்திகள் மலேசியா
தேசிய கூட்டணியின் தகவல் பிரிவு தலைவராக ரட்சி ஜிடின் நியமனம்: பெர்சத்து கட்சி வட்டாரங்கள் தகவல்
கோலாலம்பூர்:
தேசிய கூட்டணியின் தகவல் பிரிவு தலைவராக புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரட்சி ஜிடின் நியமிக்கப்பட்டுள்ளதாக பெர்சத்து கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தது.
தேசிய கூட்டணியின் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் கடந்த பிப்ரவரி மாதம் வாய்மொழி வழியாக ரட்சி ஜிடின் அக்கூட்டணியின் தகவல் பிரிவு தலைவராக நியமிக்கபட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன் தேசிய கூட்டணியின் தகவல் பிரிவு தலைவராக அஹ்மத் ஃபைசால் அசுமு இருந்த நிலையில் தற்போது ரட்சி ஜிடின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ரட்சி ஜிடினின் நியமனம் குறித்து பாஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பாசீர் மாஸ் எம்.பி அஹ்மத் ஃபட்லி ஷாரி கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm