நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூட்டணி குறித்து முடிவெடுக்க சபா அம்னோவிற்கு முழு அதிகாரம் உள்ளது: டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தகவல் 

கோலாலம்பூர்: 

சபா மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொடர்பாகவும் பிற கட்சிகளுடன் ஒத்துழைப்பு குறித்தும் முடிவெடுக்க சபா மாநில அம்னோவிற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

நாட்டின் துணைப்பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார். 

சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ரடின் தலைமையிலான தேசிய முன்னணி சபா மாநில அரசியலில் சிறந்த அடைவு நிலையைப் பெறும் என்று தாம் நம்பிக்கை கொள்வதாக அவர் சொன்னார். 

மாநில அரசாங்கத்தை எந்தவொரு கட்சியும் தனித்து உருவாக்க முடியாது. வலுவான கூட்டணி கட்சிகள் அமைத்தால் தேசிய முன்னணி மகத்தான முறையில் சபா மாநில அரசியலில் வெற்றியைக் காண முடியும். 

முன்னதாக கோத்தா கினாபாலுவில் தேசிய முன்னணி தேர்தல் கேந்திரத்தை தொடக்கி வைத்து ஸாஹித் ஹமிடி செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset