நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக அவதூறு தகவலை வெளியிட்ட தரப்பினருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடுக்கப்படும்: டாக்டர் பி.இராமசாமி மிரட்டல்

கோலாலம்பூர்: 

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதி தவறாக பயனபடுத்தப்பட்டதாக தனக்கு எதிராக 17 ஊழல், நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணையில் அவதூறு பரப்பியதாக சில சமூக ஊடக பயனர்களுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாக உரிமை கட்சியின் தலைவர் டாக்டர் பி.இராமசாமி மிரட்டல் விடுத்துள்ளார். 

வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் எந்தவொரு தரப்பினரும் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு பி.இராமசாமியின் வழக்கறிஞர் ஷம்ஷெர் சிங் கூறினார். 

மேலும், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அவதூறான அல்லது தவறான தகவலை வெளியிட்ட தரப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் டாக்டர் பி.இராமசாமி தமக்கு உத்தரவிட்டதாக அவரின் வழக்கறிஞர் கருத்துரைத்தார். 

முன்னதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக இருந்தபோது சுமார் 859,131.29 ரிங்கிட் நிதியை வாரியத்தின் முறையான அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தியதாக டாக்டர் பி.இராமசாமி மீது 17 ஊழல், நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டது. 

2019 மே மற்றும் 2022 பிப்ரவரி ஆகிய மாதங்களில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றம் டாக்டர் பி.இராமசாமி மீது குற்றஞ்சாட்டியது. இருப்பினும். தனக்கு எதிரான 17 குற்றச்சாட்டுகளையும் டாக்டர் பி.இராமசாமி மறுத்து விசாரணை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset