நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரு கவிஞனின் மறைவில் உருவானது தான் பா. இராமு அறக்கட்டளை: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

ஒரு கவிஞனின் மறைவில் உருவானது தான் பா. இராமு அறக்கட்டளை என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

கடந்த 2021இல் பா. இராமு அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

மலேசியக் கவிஞர்கள் தங்கள் படைப்பை வெளியாக்கத் தளம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று மரபு கவிதை தொகுப்பு 2இன் அறிமுக விழா நடைபெற்றது. 

கவிதைக்குத் தளம் அமைப்பது மட்டுமன்றி முனைவர் மனோன்மணி தேவி தலைமையில் மரபு கவிதை எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறையும் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது. 

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், தொகுப்பு இரண்டிற்கான கவிதைகளை வழங்க ஆயுத்தமாக இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset