
செய்திகள் மலேசியா
கெஅடிலான் தேர்தலில் பண அரசியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை டத்தோஸ்ரீ ரமணன் மறுத்தார்
ஷாஆலம்:
கட்சித் தேர்தலில் ஆதரவைப் பெற பண அரசியலைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை கெஅடிலான் உதவித் தலைவர் வேட்பாளர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் மறுத்தார்.
தற்போது வைரலாகி உள்ள வீடியோ சிலாங்கூர் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட நன்கொடைகள் வாக்காளர்களுக்கு அல்ல. அவரது பிரச்சார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
சேவை மையத்திற்கு வெளியே எனது ஊழியர்களுக்கு நான் பணம் கொடுத்தேன்.
அந்த வீடியோவை கூர்ந்து கவனித்தால், கதவில் நம்பிக்கை கூட்டணி சின்னம் உள்ளது. அதில் என்ன தவறு இருக்கிறது.
தெக்குன் நேஷனல் அடிப்படை தொழில்முனைவோர் கருத்தரங்கை தொடக்கி வைத்த பின்னர் டத்தோஸ்ரீ ரமணன் இதை கூறினார்.
இந்த காணொளி பரவுவதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்.
இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு அவதூறு.
இந்தப் பிரச்சினை நீண்ட காலத்திற்கு முன்பு நிகழ்ந்தது.
தேர்தல் சட்டங்களை மீறுவது குறித்து எந்தத் தகவலும் இல்லாத போதிலும், வேண்டுமென்றே மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது.
இது ஒரு புதிய பிரச்சினை அல்ல. இது கட்சித் தேர்தல் காலம் என்பதால், பல விஷயங்கள் திரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.
இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
அவர்கள் யார் என்பது அவர்களுக்கும் தெரியும் என்று டத்தோஸ்ரீ ரமணன் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm