
செய்திகள் மலேசியா
உலகம் முழுவதும் வர்த்தகத்துடன் தமிழையும் கொண்டு சேர்த்த தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
திருச்சி:
உலகம் முழுவதும் வர்த்தகத்துடன் தமிழையும் கொண்டு சேர்த்த தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.
தமிழ் மொழி வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தமிழ் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது.
குறிப்பாக தமிழ் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் வர்த்தகத்தை கொண்டு சென்று அதில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.
அதே வேளையில் அம்மக்கள் வர்த்தகத்துடன் தமிழ் மொழியையும் கொண்டு சேர்த்துள்ளனர்.
இதன் வாயிலாக தமிழ் மொழி இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
இப்படி தமிழ்மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் முஸ்லிம் பங்களிப்பை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை.
இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:23 pm
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm