
செய்திகள் மலேசியா
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
புத்ரா ஜெயா:
இம்மாதம் நடைபெறவுள்ள பிகேஆர் தேர்தல்கள் மற்றும் கட்சியின் உயர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து எழுந்த வதந்திகளுக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைக்க மறுத்துள்ளார்.
முன்னதாக, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நூருல் இசாவைத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வழிவகை செய்வார் என்று செய்தி வெளியானது.
அது குறித்து அன்வார் பதிலளிக்கவில்லை. மாறாக, பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் இன்னும் திறக்கப்பட்டுள்ளது.
தான் இன்னும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் நகைச்சுவையாக இன்று புத்ராஜெயாவில் உள்ள சூராவ் அல்-இமானில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
மே 23-ஆம் தேதி நடைபெற உள்ள பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவிவிக்குத் தாம் போட்டியிட எண்ணம் கொண்டிருப்பதால பிரதமரின் மகள் நூருல் இசா தெரிவித்தார்.
நூரில் இசாவின் முடிவிற்கு பல பிகேஆர் கட்சித் தொகுதி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
2022-ஆம் ஆண்டு நூருல் இசா பிகேஆர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am