செய்திகள் இந்தியா
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
புதுடெல்லி:
பஞ்சாப் - ஹரியானா தலைநகரான சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதியில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்தியா தனது விமானப்படை மூலம் பாகிஸ்தானில் 9 இடங்களில் 24 ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. தொடர்ந்து, மிக முக்கிய நடவடிக்கையாக லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பை தாக்கி அழித்துள்ளது.
அதோடு, பாகிஸ்தானின் விமானப் படை தாக்குதல் முயற்சிகளை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து முறியடித்து வருகின்றன.
பலத்த சேதத்துக்கு மத்தியிலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், இந்தியா உறுதியான பதிலடியை கொடுத்து வருகிறது.
‘உஷார் நிலையில் சண்டிகர்’ - இந்நிலையில், பாகிஸ்தான் குறிவைக்கும் சில நகரங்களில் சண்டிகர் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, சண்டிகர் நகர மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
சண்டிகரில் ஏர் சைரன்கள் மூலம் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 12:57 pm
2026 ஆம் ஆண்டில் 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான பருவமழையை இந்தியா எதிர்பார்க்கிறது
May 29, 2026, 9:52 am
இந்தியாவின் பிரபல உருது கவிஞர் பஷீர் பத்ர் 91 வயதில் காலமானார்
May 29, 2026, 8:34 am
கர்நாடாகாவின் முதல்வர் ஆகிறார் டி.கே.சிவக்குமார்
May 28, 2026, 8:23 pm
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா
May 27, 2026, 2:11 pm
ஈரானில் தடுத்து வைக்கப்பட்ட 10 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
