செய்திகள் இந்தியா
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
புதுடெல்லி:
பஞ்சாப் - ஹரியானா தலைநகரான சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதியில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்தியா தனது விமானப்படை மூலம் பாகிஸ்தானில் 9 இடங்களில் 24 ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. தொடர்ந்து, மிக முக்கிய நடவடிக்கையாக லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பை தாக்கி அழித்துள்ளது.
அதோடு, பாகிஸ்தானின் விமானப் படை தாக்குதல் முயற்சிகளை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து முறியடித்து வருகின்றன.
பலத்த சேதத்துக்கு மத்தியிலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், இந்தியா உறுதியான பதிலடியை கொடுத்து வருகிறது.
‘உஷார் நிலையில் சண்டிகர்’ - இந்நிலையில், பாகிஸ்தான் குறிவைக்கும் சில நகரங்களில் சண்டிகர் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, சண்டிகர் நகர மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
சண்டிகரில் ஏர் சைரன்கள் மூலம் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் வாங்கி ஏமாற்றிய இந்திய வம்சாவளி சிஇஓ
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
