செய்திகள் மலேசியா
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
குளுவாங்:
மழலையர் கூடத்தில் ஐந்து மாதம் குழந்தை ஒன்று சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் இங்குள்ள குளுவாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இருப்பினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணை கோரினார்.
நீதிபதி ஒஸ்மான் அஃபெண்டி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட 20 வயதுடைய அமீரா ஹஜிரா முஹம்மத் ஃபாரிட் ஒப்புதலை வழங்கினார்.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணியளவில் ஐந்து மாத குழந்தைக்கு காயம் விளைவித்ததாக குத்தப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
2001ஆம் ஆண்டு சிறார்கள் சட்டத்தின் கீழ் குழந்தை பராமரிப்பாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை தண்டனை, 50 ஆயிரத்திற்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்படும்
ஆவணங்கள் சமர்ப்பிப்பு நடவடிக்கைக்காக இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 13ஆம் தேதி நீதிமன்றத்தால் மீண்டும் செவிமடுக்கப்படும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 10:56 pm
நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம்: கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை விவாதிக்கும்?
September 17, 2026, 10:56 pm
டாவ்லாட் துவாங்கு, துரோகிகளைப் பிடியுங்கள் என்ற கோஷங்களுடன் துவாங்கு முஹ்ரிஸை வரவேற்க 100 பேர் கேஎல்ஐஏவில் கூடினர்
September 17, 2026, 10:55 pm
அரசாங்கம் மின்சார மானியப் பாதுகாப்பு அளவை ஒரு யூனிட் மின்சாரம் 600லிருந்து 800ஆக உயர்த்துகிறது
September 17, 2026, 10:54 pm
கும்பல் முறியடிப்பு; 35 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல்: ஹுசைன் ஒமார் கான்
September 17, 2026, 9:50 pm
எப்ஏஎம் தலைவராக டத்தோ அப்துல் கனி தேர்வு: டத்தோ சேரன் உதவித் தலைவரானார்
September 17, 2026, 5:48 pm
சிலாங்கூர் சிறுவர் பாடல் திறன் போட்டி; சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும்: டாக்டர் குணராஜ்
September 17, 2026, 4:15 pm
டத்தின்ஶ்ரீ ரொஸ்மா மன்சோர் ஊழல் வழக்கு: கூடுதல் சாட்சியப் பதிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை
September 17, 2026, 12:49 pm
