
செய்திகள் மலேசியா
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
குளுவாங்:
மழலையர் கூடத்தில் ஐந்து மாதம் குழந்தை ஒன்று சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் இங்குள்ள குளுவாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இருப்பினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணை கோரினார்.
நீதிபதி ஒஸ்மான் அஃபெண்டி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட 20 வயதுடைய அமீரா ஹஜிரா முஹம்மத் ஃபாரிட் ஒப்புதலை வழங்கினார்.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணியளவில் ஐந்து மாத குழந்தைக்கு காயம் விளைவித்ததாக குத்தப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
2001ஆம் ஆண்டு சிறார்கள் சட்டத்தின் கீழ் குழந்தை பராமரிப்பாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை தண்டனை, 50 ஆயிரத்திற்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்படும்
ஆவணங்கள் சமர்ப்பிப்பு நடவடிக்கைக்காக இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 13ஆம் தேதி நீதிமன்றத்தால் மீண்டும் செவிமடுக்கப்படும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm
சட்டத்துறை நியமனச் செயல்முறை அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
July 11, 2025, 3:17 pm