
செய்திகள் இந்தியா
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை நடுவானிலேயே இந்திய இராணுவம் வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டது.
இந்தியா மீதான பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் மீண்டும் முறியடித்துள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
ஜம்முவில் கிஷ்த்வார் என்ற பகுதியில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா மற்றும் அண்டை பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து 8 ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அவை அனைத்தும் S400 ஆல் இடைமறித்து அழிக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் அவசரகால சைரன் ஒலிப்படுகிறது.
முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்முவிலிம் ராஜஸ்தானின் எல்லையோரங்களிலும் இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்திவருகிறது.
இந்திய எல்லையில் நடைபெறும் தாக்குதளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துவருகிறது.
பாகிஸ்தான் விமானப்படையின் எப் – 16 ரக விமானம் உள்பட 3 விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 7:23 pm
ஹைதரபாத்தின் சார்மினார் பகுதியில் கடுமையான தீ விபத்து: 17 பேர் பலி
May 16, 2025, 1:34 am
ட்ரம்ப்பை விமர்சித்து பதிந்த கருத்தை அவசரமாக நீக்கிய நடிகை கங்கனா
May 14, 2025, 2:50 pm
இந்திய உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்
May 13, 2025, 8:26 am
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது: இந்தியப் பிரதமர் மோடி
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm