செய்திகள் இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு
புதுடில்லி:
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' எதிரொலியாக வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 'ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் 12 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 11:09 am
ஐ.பி.எல் தொடருக்காக இந்தியா வந்த பிரிட்டிஷ் பொறியாளர் மரணம்: மும்பை காவல்துறையினர் தீவிர விசாரணை
April 1, 2026, 5:33 pm
திருநங்கையர் விழிப்புணர்வு நாளில் அதிரடிப் போராட்டம்: புதிய சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு
April 1, 2026, 10:12 am
சட்டவிரோத சிறுநீரக விற்பனை கும்பல் பிடிபட்டது: 5 மருத்துவர்கள் உட்பட 6 பேர் கைது
March 31, 2026, 5:31 pm
கேரளாவில் அதிர்ச்சி: சிம் கார்டுகளைத் திருடி நூதனமாக வங்கிகளில் களவாடிய ஆடவர் கைது
March 31, 2026, 5:30 pm
ஆக்ராவில் பரபரப்பு: 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
March 31, 2026, 5:29 pm
விமான நிலையத்தில் நுழைந்த கரடி: கர்நாடக வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை
March 31, 2026, 5:28 pm
