நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் வெற்றிப்பெற்றதையடுத்து தேசிய முன்னணி கடுமையாக உழைக்க வேண்டும்: பிரதமர் அன்வார் நினைவுறுத்தல் 

புத்ராஜெயா: 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்றதை அடுத்து வாக்காளர்களின் ஆதரவு தற்போது தேசிய முன்னணி பக்கம் மீண்டும் திரும்பியுள்ளது. 

இதனால் மக்களின் ஆதரவினை மீண்டும் தக்கவைத்து கொள்ள தேசிய முன்னணி கடுமையாக உழைக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார். 

இளையோர்கள், மலாய் சமூகத்தின் வாக்குகள் தற்போது தேசிய முன்னணி பக்கம் திரும்பியுள்ளது. 

தேசிய முன்னணி ஆயிர் கூனிங் சட்டமன்ற தொகுதியை தக்க வைத்து கொண்டுள்ளது. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று அன்வார் குறிப்பிட்டார். 

கடந்த வாரம் நடைபெற்ற ஆயிர் கூனிங் சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் யுஸ்ரி 11,065 வாக்குகளில் வெற்றிப்பெற்றார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset