நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காராக் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய 2 அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை போலிசார் தேடி வருகின்றனர்

பெந்தோங்:

காராக் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய 2 அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

பெந்தோங் மாவட்ட போலிஸ் தலைவ ஜைஹாம் முகமட் கஹார் இதனை தெரிவித்தார்.

நேற்று காலை கோலாலம்பூர் - காரக் விரைவுச் சாலையின் கிழக்கு நோக்கிய கிலோமீட்டர் 43.4 இல் விபந்த்து ஒன்று நிகழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கிய மூன்று உயர் சக்தி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் இருவரை போலிசார் தேடி வருகின்றனர்.

நேற்று இரவு 8 மணியளவில் சமூக ஊடகங்களில் ஒரு நிமிடம் 20 வினாடிகள் கொண்ட காணொளி வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் கண்டறியப்பட்டது.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கி, சாலை தடுப்பு கம்பங்களை மோதியதில் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மற்ற இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset