
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல்: மாலை 4 மணி நிலவரப்படி 54.01% வாக்குப்பதிவு
தாப்பா:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 54.01% வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வந்தனர்.
தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
63 முகப்பிடங்களை கொண்ட 19 வாக்குச் சாவடிகளும் காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.
மொத்தம் 18 வாக்குச்சாவடி மையங்கள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
அதே வேளையில் தோ தந்தேவா தேசிய பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம் மாலை 4 மணிக்கு மூடப்படும்.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமாக 74.85 சதவீதம் வாக்குப் பதிவை எட்டியது.
இன்றைய வாக்களிப்புச் செயல்பாட்டில் 31,281 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2025, 5:13 pm
இது ஒரு பகற்கனவு அல்ல; அது ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கிறது: மொஹைதின்
April 26, 2025, 5:12 pm
பாலியல் செயல்பாடுகள் காரணமாக 13 வயதுக்குட்பட்டவர் எச்.ஐ.வி. தொற்று நோயால் பாதிப்பு
April 26, 2025, 4:38 pm
தமிழ்ப்பள்ளிகள், தமிழர்கள் வாழும் இடங்களில் தமிழர் திருநாள் பரவலாக நடத்தப்பட வேண்டும்: முருகன்
April 26, 2025, 1:40 pm