செய்திகள் மலேசியா
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமார் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்: போலிஸ்
செராஸ்:
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன் இனறு செராஸின் தாமான் டேசா பெட்டாலிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்.
செராஸ் மாவட்ட போலிஸ் தலைவர் ஐடில் போல்ஹாசன் இதனை தெரிவித்தார்.
48, 76 வயதுடைய இரண்டு பாதிக்கப்பட்டவர்களும் கட்டிடத்தின் 11ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படுவதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.35 மணியளவில் நடந்தது. இதுவரை, எந்த குற்றவியல் கூறுகளும் அடையாளம் காணப்படவில்லை.
ஆனால் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இன்னும் நடத்தப்பட்டு வருகின்றன அவர் கூறினார்.
மரணமடைந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஐடில் கூறினார்.
சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள போலிஸ் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 28, 2025, 11:59 am
பள்ளிகளில் திடல் இல்லை என்பது விளையாடும் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு மிகப் பெரிய துயரமாகும்: டத்தோஸ்ரீ சரவணன்
November 28, 2025, 11:57 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
November 27, 2025, 10:29 pm
கம்போங் ஜாவா லோட் வீடுகள் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது: பாதிக்கப்பட்ட மக்கள்
November 27, 2025, 10:14 pm
வெப்பமண்டல புயலால் பலத்த காற்றுடன் 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யலாம்: மெட் மலேசியா
November 27, 2025, 3:38 pm
பள்ளி விடுதி குளியலறையில் தாக்கப்பட்ட 4ஆம் படிவம் மாணவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்
November 27, 2025, 3:37 pm
அவதூறு பேசும் நீங்கள் பணக்காரர்கள்; மக்கள் ஏழைகள்: பிரதமர் காட்டம்
November 27, 2025, 1:49 pm
எச்ஆர்டி கோர்ப் விருதுகள் 2025; மலேசியாவின் மனித மூலதன மேம்பாட்டு முயற்சிகளை அங்கீகரிக்கிறது: டத்தோ அஸ்மான்
November 27, 2025, 11:19 am
