செய்திகள் மலேசியா
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமார் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்: போலிஸ்
செராஸ்:
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன் இனறு செராஸின் தாமான் டேசா பெட்டாலிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்.
செராஸ் மாவட்ட போலிஸ் தலைவர் ஐடில் போல்ஹாசன் இதனை தெரிவித்தார்.
48, 76 வயதுடைய இரண்டு பாதிக்கப்பட்டவர்களும் கட்டிடத்தின் 11ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படுவதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.35 மணியளவில் நடந்தது. இதுவரை, எந்த குற்றவியல் கூறுகளும் அடையாளம் காணப்படவில்லை.
ஆனால் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இன்னும் நடத்தப்பட்டு வருகின்றன அவர் கூறினார்.
மரணமடைந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஐடில் கூறினார்.
சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள போலிஸ் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 12:23 pm
சிறுவனின் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவம்: பெற்றோருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்
October 29, 2025, 12:22 pm
சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கான மானியம் நிலை நிறுத்தப்பட வேண்டும்: டாக்டர் சுரேந்திரன்
October 29, 2025, 12:20 pm
பொது நலன் இருந்தால் மட்டுமே மலேசியா அமெரிக்கத் தடைகளுக்கு இணங்க வேண்டும்: ஸப்ரூல்
October 29, 2025, 12:18 pm
அடகுக் கடையில் 5.7 மில்லியன் தங்கக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட காதலன், கடை மேலாளர் கைது: போலிஸ்
October 29, 2025, 11:15 am
குடிபோதையில் சீன ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் நபரை போலிசார் கைது செய்தனர்
October 29, 2025, 11:13 am
மாணவர் பாதுகாப்பு பிரச்சினைகளில் கல்வியமைச்சு உறுதியாக உள்ளது: ஃபட்லினா
October 28, 2025, 9:36 pm
கோப்பெங் தமிழ்ப்பள்ளி கட்டடம் அடுத்தாண்டு கட்டப்படும்: தான் கா இங்
October 28, 2025, 7:03 pm
