
செய்திகள் மலேசியா
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமார் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்: போலிஸ்
செராஸ்:
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன் இனறு செராஸின் தாமான் டேசா பெட்டாலிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்.
செராஸ் மாவட்ட போலிஸ் தலைவர் ஐடில் போல்ஹாசன் இதனை தெரிவித்தார்.
48, 76 வயதுடைய இரண்டு பாதிக்கப்பட்டவர்களும் கட்டிடத்தின் 11ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படுவதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.35 மணியளவில் நடந்தது. இதுவரை, எந்த குற்றவியல் கூறுகளும் அடையாளம் காணப்படவில்லை.
ஆனால் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இன்னும் நடத்தப்பட்டு வருகின்றன அவர் கூறினார்.
மரணமடைந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஐடில் கூறினார்.
சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள போலிஸ் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 9:54 am
நிறுவன இயக்குநரின் ஊழல் விசாரணையில் கோல்ப் கிளப்பை எம்ஏசிசி கைப்பற்றியது
July 11, 2025, 9:53 am
வழக்கறிஞர்கள் பேரணியில் பங்கேற்பதை பாஸ் கட்சி உறுதிப்படுத்தியது
July 11, 2025, 9:40 am
மலேசியா மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 9:24 am
காணாமல் போன பிரிட்டன் இளைஞரைத் தேடும் பணி தீவிரம்: அரச மலேசியப் போலீஸ்படை
July 10, 2025, 10:36 pm
போலிஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்; இருவரின் உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது: ஐஜிபி
July 10, 2025, 10:34 pm
தொழிற்சாலை பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது: ஓட்டுநர் உட்பட 22 பயணிகள் காயம்
July 10, 2025, 10:15 pm