நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜேடிதி அணியின் சாதனைகளை பாராட்டும் வகையில் ஜொகூரில் ஏப்ரல் 28ஆம் தேதி பொது விடுமுறை: மந்திரி புசார்

ஜொகூர்பாரு:

ஜொகூர்  மாநில அரசு ஏப்ரல் 28ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து ஜொகூர் மக்களுக்கும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

ஜேடிதி அணியின் சிறந்த சாதனைகளுக்கு வலுவான ஆதரவு, பாராட்டுக்கான அறிகுறியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி கூறினார்.

நாளை நடைபெறவிருக்கு ஸ்ரீ பஹாங் அணிக்கு எதிரான மலேசியா கிண்ண கால்பந்து போட்டி  இறுதி ஆட்டத்திற்கு வெற்றிகரமாக முன்னேறியதற்காக ஜேடிதி அணிக்கு வாழ்த்துக்கள்.

ஜொகூர் சுல்தான் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலின் ஆணைக்கு இணங்க,

ஜொகூர் அரசு ஏப்ரல் 28 திங்கட்கிழமையை ஜொகூர் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.

மலேசியாவில் மட்டுமல்ல, இப்போது ஆசிய கண்டத்தில்  மதிக்கப்படும் ஒரு மதிப்புமிக்க கால்பந்து கிளப்பாக ஜேடிதி மாற்றியதில் அவரது தொலைநோக்கு, திட்டமிடல், அசாதாரண முயற்சிகளுக்காக துங்கு இஸ்மாயிலுக்கு நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset