நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா- அமெரிக்கா வரி குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமான முறையில் சென்று கொண்டிருக்கிறது: தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் தகவல் 

கோலாலம்பூர்: 

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக மலேசியா- அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இந்த பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் சென்று கொண்டிருப்பதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் கூறினார். 

எதிர்வரும் மே 28 முதல் மே 30ஆம் தேதி வரை அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் மலேசிய பேராளர்கள் அமெரிக்க பிரதிநிதிகளுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று அமைச்சர் தெரிவித்தார். 

நாட்டிற்கு முக்கியமாக பங்காற்றும் தொழிற்துறைகள் தொடர்பான வரி குறித்த பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. 

அமெரிக்கா மலேசியாவிற்கு 24 விழுக்காடு வரியை அறிவித்தது. இந்த வரி காரணமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை மலேசியா முன்னெடுத்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset