
செய்திகள் மலேசியா
பாராங்கத்தி ஏந்திய கும்பல் தாக்கியதில் ஆடவர் ஒருவர் 5 விரல்களை இழந்தார்
சுபாங்ஜெயா:
பாராங்கத்தி ஏந்திய ஐவர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஆடவர் ஒருவர் 5 விரல்களை இழந்தார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை சுபாங் ஜெயாவின் பண்டார் சன்வே ஜாலான் பிஜேஎஸ் 11/2இல் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் அதிகாலை 1.54 மணியளவில் நடந்ததது.
பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும் அந்த இடத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டனர்.
30 வயதான பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும் வீடு திரும்பும் போது திடீரென ஒரு டொயோட்டா வியோஸ் கார் அவர்களை நோக்கி வந்தது.
வாகனத்தில் இருந்து இறங்கி முகமூடி அணந்திருந்த ஐந்து பேர் பாராங்கத்தியை கொண்டு பாதிக்கப்பட்டவரையும் அவரது நண்பர்களையும் தொடர்ந்து தாக்கினர்.
பாதிக்கப்பட்டவருக்கு தப்பிக்க வழி இல்லாததால் அவர் பல முறை வெட்டப்பட்டார்.
இதனால் பாதிக்கப்பட்டவரின் கைகள், கால்கள் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டன.
கூடுதலாக அவரது இடது கையில் ஐந்து விரல்களை இழந்தார் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அஸ்லான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:23 pm
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm