
செய்திகள் மலேசியா
மத்தியத் துறைமுகங்களில் கனரக வாகனங்கள் மீதான அமலாக்க நடவடிக்கை ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கும்: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
மத்தியத் துறைமுகங்களில் கனரக வாகனங்களுக்கான எதிரான அமலாக்க நடவடிக்கை ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
இந்த அமலாக்க நடைமுறை முதற்கட்டமாகத் தீபகற்ப மலேசியாவிலுள்ள
மத்தியத் துறைமுகங்களில் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
இறக்குமதி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்னதாக, முன்பதிவு செய்யப்பட்ட விபரங்கள் சரி பார்க்கப்படும்.
வாகனத்தோடு இணைந்து பொருட்களின் எடை குறிப்பிடப்பட்ட அளவிற்கு கூடுதலாக இருந்தால் அது தானியங்க முறையில் ரத்துச் செய்யப்படும் என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட வாகனம் பொருட்களைத் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாது.
அதேபோல், ஏற்றுமதி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்னதாக, துறைமுக நுழைவாயிலில் வாகனங்கள் பொருட்களோடு இணைந்து எடை போடப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகம் இருப்பின் வாகனங்கள் துறைமுகத்திற்கு சரக்குகளைக் கொண்டு அனுமதிக்கபடாது என்றார்.
அதிக எடைகளை ஏற்றிச் செல்வதற்கான குற்றங்களுக்கு எதிரான கொள்கை குறித்த கூடுதல் விவரங்கள் அந்தந்த துறைமுக அதிகாரிகளால் தொழில்துறை நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று இன்று புலாவ் இந்தாவில் உள்ள போர்ட் கிளாங் பயண முனையத்தில்மின்சார வாகனங்களை இயக்குவதற்கான கார் போக்குவரத்து லாரி ஓட்டுநர் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழாவை முடித்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 3:28 pm
தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது: அஸாம் பாக்கி
September 14, 2025, 3:26 pm
செகின்சான் கம்போங் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
September 14, 2025, 3:24 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு எம்சிஎம்சி உதவும்: ஃபஹ்மி
September 14, 2025, 3:21 pm
ஆபாச வீடியோ குறித்து சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினருக்கும் மிரட்டல்
September 14, 2025, 2:51 pm
பன்னாட்டு மரபுக் கவிதை மாநாட்டில் பாவலர் முகிலரசன் - டாக்டர் திலகவதி இணையருக்கு விருது
September 14, 2025, 2:41 pm
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
September 14, 2025, 12:50 pm
பாஸ்டி பாலர் பள்ளிகளில் முதலில் மாண்டரின், தமிழ் மொழியைக் கற்றுக் கொடுங்கள்: ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்
September 14, 2025, 12:17 pm
மஹிமாவில் இணையும் ஆலயங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: டத்தோ சிவக்குமார்
September 14, 2025, 11:57 am