செய்திகள் மலேசியா
மலேசியா, சீனா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக செயல்படுத்த பிரதமர் உத்தரவு: ஃபஹ்மி
புத்ராஜெயா:
மலேசியா, சீனா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக செயல்படுத்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் இதனை கூறினார்.
கடந்த வாரம் சீன அதிபர் ஷி ஜின் பிங் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா வந்திருந்தார்.
இப்பயணத்தின் போது மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பல புரிந்துணர்வுகள் கையெழுத்தாகின.
இந்த அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பும் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒருங்கிணைக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
கையொப்பமிடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்படும் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் விரைவில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் திட்டம்.
இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 5:40 pm
தோமி தோமஸ் வழக்கின் தீர்வு நஜிப்பிற்கு கிடைத்த வெற்றி: ஷாபி அப்துல்லா
January 19, 2026, 5:40 pm
சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் வருமானத்தை அறிவிக்க வேண்டும்
January 19, 2026, 5:39 pm
ஈப்போவில் இரு ஆலயங்களுக்கான நிலப் பிரச்சினைகளுக்கு தீர்வு பிறந்தது: சிவநேசன்
January 19, 2026, 5:38 pm
தைப்பூச பக்தர்களுக்காக்க புந்தோங் சுங்கை பாரி மேம்பாலம் தற்காலிகமாக திறக்கப்படும்: துளசி
January 19, 2026, 4:05 pm
கினாபத்தாங்கானில் நடந்த கொடூரம்: செம்பனைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை
January 19, 2026, 3:22 pm
ஷா ஆலாமில் கடத்தப்பட்ட காரும், 13 வயது சிறுமியும் பாதுகாப்பாக மீட்பு
January 19, 2026, 3:03 pm
ஸ்டார் ட்யூட்டர் ஏற்பாட்டில் 350 மாணவர்களுக்கு சிறப்பு செய்த ஸ்டார் விருது விழா
January 19, 2026, 2:52 pm
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு அரசாங்கம் ஒதுக்கிய புதிய இடம் தயாராக உள்ளது: ஹன்னா இயோ
January 19, 2026, 2:51 pm
