செய்திகள் மலேசியா
மலேசியா, சீனா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக செயல்படுத்த பிரதமர் உத்தரவு: ஃபஹ்மி
புத்ராஜெயா:
மலேசியா, சீனா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக செயல்படுத்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் இதனை கூறினார்.
கடந்த வாரம் சீன அதிபர் ஷி ஜின் பிங் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா வந்திருந்தார்.
இப்பயணத்தின் போது மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பல புரிந்துணர்வுகள் கையெழுத்தாகின.
இந்த அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பும் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒருங்கிணைக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
கையொப்பமிடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்படும் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் விரைவில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் திட்டம்.
இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 2:58 pm
சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பு (PGRM) தகுதியானவர்களுக்கு விருது வழங்கி வரலாறு படைத்தது
November 20, 2025, 1:48 pm
நீதிமன்றம் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அடாம் ரட்லான் காணாமல் போனார்: அசாம் பாக்கி
November 20, 2025, 1:47 pm
2025 ஹஜ் யாத்திரையை தங்கள் நிதி நெருக்கடி காரணமாக 50 சதவீத யாத்ரீகர்கள் நிராகரித்துள்ளனர்: அமைச்சர் நயீம்
November 20, 2025, 10:03 am
மலேசியா, எத்தியோப்பியா இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும்
November 20, 2025, 10:02 am
வெள்ள நீர் மோதியதால் பாலம் இடிந்து விழுந்தது: 3,000 பூர்வக்குடி மக்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது
November 20, 2025, 10:00 am
சிரம்பான் செண்டாயானில் உள்ள உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
November 19, 2025, 10:21 pm
சர்க்கரை சேர்க்காத நாளை இந்திய முஸ்லிம் உணவகங்கள் அறிமுகப்படுத்தும்: பிரெஸ்மா
November 19, 2025, 10:19 pm
சபா தேர்தலுக்குப் பிறகு மஇகா பிரச்சினைகள் குறித்து தேசிய முன்னணி உச்சமன்றம் விவாதிக்கும்: ஜம்ரி
November 19, 2025, 6:17 pm
