செய்திகள் உலகம்
தவறான கணினி மென்பொருள் மூலம் மோசடிச் சம்பவங்கள்: $2.4 மில்லியன் இழந்த சிங்கப்பூரர்கள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் முதல் தீய கணினி மென்பொருள் மூலம் நடந்த மோசடிச் சம்பவங்களில் குறைந்தது 2.4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்தகைய மோசடிச் சம்பவங்கள் குறித்து சுமார் 128 புகார்கள் செய்யப்பட்டடன.
பாதிக்கப்பட்டவர்கள் Facebook, Tiktok தளங்களில் இடம்பெற்ற சில விளம்பரங்களைக் கண்டனர்.
அவற்றில் விளம்பரப்படுத்தப்பட்ட பொருள்களையும் சேவைகளையும் பெற அவர்களது தொடர்பு விவரங்களைப் பகிர்ந்தனர்.
பின் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களை WhatsApp செயலி மூலம் தொடர்புகொண்டனர்.
அவர்களிடம் சந்தாக் கட்டணம் கட்டுவதற்கான இணையத்தள முகவரியைத் தந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் வங்கி அட்டை விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கினர்.
அப்போது மோசடிக்காரர்களின் பரிந்துரைப்படி பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது Android கைத்தொலைபேசிகளில் மென்பொருள் ஒன்றைத் தரவிறக்கம் செய்தனர்.
அந்தத் தீய கணினி மென்பொருள் மூலம் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறுந்தகவலில் அனுப்பப்படும் OTP எண்களைப் பெற்றனர்.
அவற்றை வைத்து மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டைகளை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாய் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 20, 2026, 10:48 am
ஹோர்முஸ் நீரிணை பயணத்திற்குப் புதிய கட்டுப்பாடுகள்: ஈரானின் அதிரடி நடைமுறைகள் அறிவிப்பு
June 19, 2026, 2:51 pm
சீற்றம் காட்டிய செமெரு எரிமலை: 4.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்த கொதிநிலை மேகங்கள்
June 19, 2026, 2:03 pm
தாய்லாந்து – வியட்நாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
June 18, 2026, 11:18 am
இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் மகன் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு பின் கைது
June 17, 2026, 5:17 pm
மாணவர் எழுச்சியால் பரபரக்கும் ஜகார்த்தா: 4,576 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்
June 17, 2026, 1:02 pm
வியட்நாமில் இறைச்சிக்காகத் திருடப்பட்ட 400க்கும் அதிகமான பூனைகள் காப்பாற்றப்பட்டன
June 17, 2026, 11:48 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் டெங்கிச் சம்பவங்கள்
June 17, 2026, 9:45 am
