
செய்திகள் மலேசியா
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆலயப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்: மஹிமா
கோலாலம்பூர்:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆலயப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தல நிர்வாகங்கள் ஆலயங்களை பாதுகாப்பதிலும் முறையாகப் பாதுகாப்பதிலும், நிறுவப்பட்ட சட்டங்களுக்கு இணங்குவதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆலய கட்டுமானம் ஒரு புதிய நடைமுறை அல்ல. ஒவ்வொரு இனத்தின் சமூக, கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, மலாயாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆலயங்கள் மத மையங்களாகவும், அங்குள்ள மக்கள் ஒன்றுகூடும் இடங்களாகவும் உருவாக்கப்பட்டன.
மலாயா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்த நடைமுறை தொடர்ந்தது. எனவே, இது ஒன்றும் புதியதல்ல, தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் நிர்வாகத்தை மாற்றும் போது, புதிய நிர்வாகம் அந்தப் பகுதியில் ஆலயம் இருப்பதை ஆதரிக்கும், நிரூபிக்கும் அனைத்து ஆவணங்களையும் பெற வேண்டும்.
ஆலய நிர்வாகம் முறையாக ஆவணப்படுத்தத் தவறினால் அது ஆலய நிர்வாகத்தில் குழப்பத்தையும் மோதலையும் ஏற்படுத்தும்.
இதில் நிலப் பிரச்சினைகள், ஒதுக்கீடு சிக்கல்கள், ஆர்ஓஎஸ் பதிவும் அடங்கும்.
எனவே, ஆலய நிர்வாகத்தினர் ஆவண அமைப்பின் முழுமையை பராமரித்து உறுதி செய்ய வேண்டும்.
ஒரு வழிபாட்டுத் தலத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து எழும் பிரச்சினைகளைத் தீர்க்க முறையான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
பல ஆலயங்களுக்கு நான் பலமுறை சென்றபோது, பெரும்பாலான ஆலயங்கள் இந்தப் பிரச்சினையை இந்து அரசு சாரா இயக்கங்களால் தீர்க்க முடியாது என்று தெரிவித்தன.
அரசு சாரா இயக்கங்கள் மற்ற அனைவரையும் போலவே சாதாரண மக்களால் ஆனவை என்பதை ஆலய நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் பிரபலமாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு அதிகாரம் இல்லை.
ஆகையால் நமது நாட்டுத் தலைவர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
மக்களால் முழு நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
இது தான் சரியான முடிவாக இருக்கும் என்று டத்தோ சிவக்குமார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm