நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் பார்சிலோனா, பிஎஸ்ஜி

முனிச்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் அரையிறுதியாட்டத்திற்கு பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகள் முன்னேறின.

இடுடா பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் பார்சிலோனா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

புரோசியா டோர்ட்மண்ட் அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் செர்ஹாவ் காய்ராசி ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.

இருந்தாலும் இரு ஆட்டங்களின் முடிவில் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பார்சிலோனா அணியினர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர்  5-4 என்ற மொத்த கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை விழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset