நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

1000 கோல்களை துரத்தவில்லை: ரொனால்டோ

ரியாத்:

கால்பந்து விளையாட்டில் தாம் 1000 கோல்களை துரத்தவில்லை என்று ஜாம்பவான் ரொனால்டோ கூறினார்.

சவூதி புரோ லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்கள் அடிக்க அல் நசர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் ஹிலால் அணியை வீழ்த்தியது.

இதில் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் அவரது மொத்த கோல்களின் எண்ணிக்கை 931 ஆக உயர்ந்தது.

இதுகுறித்து பேசிய ரொனால்டோ, இந்த தருணத்தை, நிகழ்காலத்தை அனுபவிப்போம். 

நான் 1,000 கோல்களைத் துரத்தவில்லை. அது சரியானதாக இருந்தால் இருக்கட்டும். சரியானதாக இல்லாவிட்டால் பரவாயில்லை.

இந்த தருணம் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம், அது என்ன வரப்போகிறது என்பதல்ல. நான் அந்த தருணத்தை ரசித்தேன் என்பதுதான்.

அது ஒரு சிறந்த வெற்றி. அது நான் கோல் அடித்ததால் மட்டும் அல்ல.

அல் ஹிலாலுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனால், கிண்ணத்தை வெல்வது மிக முக்கியமானது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset