
செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமர் அப்துல்லாஹ் அஹமது படாவியின் நல்லுடலுக்கு சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அஞ்சலி செலுத்தினார்
கோலாலம்பூர்:
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் அப்துல்லாஹ் அஹமது படாவிக்கு இன்று அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இறுதிச் சடங்கில் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கலந்துகொண்டார்.
லீயுடன் அவரின் துணைவியாரும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் சென்றதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
பிரதமர் லாரன்ஸ் வோங் அவரது Facebook பக்கத்தில் அஞ்சலி செலுத்தினார். மலேசியாவின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்குத் திரு படாவி முக்கிய பங்காற்றினார் என்றும் ஆசியான் நாடுகளின் நிலையை உயர்த்தினார் என்றும் வோங் கூறினார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் தமது முகநூல் பக்கத்தில் அவருடைய அனுதாபங்களைத் தெரிவித்தார்.
அப்துல்லாஹ் படாவி மலேசியப் பிரதமராக இருந்தபோது இருதரப்பு உறவு மேம்பட்டதாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 2:17 pm
புக்கிட் மேரா சீனப்பள்ளி கூரையைச் சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும்: சிவக்குமார்
July 3, 2025, 2:16 pm
கார் விபத்திற்குப் பிறகு போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இருவர் கைது
July 3, 2025, 1:23 pm
ஜாலான் மஸ்ஜித் இந்தியா: நில அமிழ்வு தொடர்பான விசாரணை அறிக்கை நிறைவு
July 3, 2025, 12:43 pm
3D தொழில்நுட்பத்தில் உடல் உறுப்புகளைத் தயாரிக்கும் ஹாங்காங்
July 3, 2025, 12:33 pm
இந்தியா செல்ல இனி இலவச விசா இல்லை: தூதரகம் அறிவிப்பு
July 3, 2025, 11:32 am