
செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமர் அப்துல்லாஹ் அஹமது படாவியின் நல்லுடலுக்கு சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அஞ்சலி செலுத்தினார்
கோலாலம்பூர்:
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் அப்துல்லாஹ் அஹமது படாவிக்கு இன்று அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இறுதிச் சடங்கில் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கலந்துகொண்டார்.
லீயுடன் அவரின் துணைவியாரும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் சென்றதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
பிரதமர் லாரன்ஸ் வோங் அவரது Facebook பக்கத்தில் அஞ்சலி செலுத்தினார். மலேசியாவின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்குத் திரு படாவி முக்கிய பங்காற்றினார் என்றும் ஆசியான் நாடுகளின் நிலையை உயர்த்தினார் என்றும் வோங் கூறினார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் தமது முகநூல் பக்கத்தில் அவருடைய அனுதாபங்களைத் தெரிவித்தார்.
அப்துல்லாஹ் படாவி மலேசியப் பிரதமராக இருந்தபோது இருதரப்பு உறவு மேம்பட்டதாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 6:37 pm
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை: 14 வயது மாணவனுக்கு இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு
October 20, 2025, 12:48 pm
கத்திக்குத்து சம்பவத்தில் பலியான மாணவி யாப் ஷிங் சூயென் சவ ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்
October 20, 2025, 11:19 am
கெடாவில் தீபாவளி பட்டாசுகள் வெடித்ததில் 22 பேர் காயம்
October 19, 2025, 11:33 pm
தீபாவளி திருநாள் அனைவருக்கும் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 19, 2025, 10:16 pm