
செய்திகள் இந்தியா
இந்தியாவில் 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை முடங்கியது
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல்வேறு இடங்களில் யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை பாதிக்கப்பட்டன. மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் யுபிஐ செயல் இழந்தது.
நேற்று மீண்டும் யுபிஐ பரிவர்த்தனை முடங்கியது. நேற்று காலை 11.30 மணிக்கு இதுதொடர்பான புகார்கள் பதிவாகின. கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற முன்னணி கட்டண செயலிகள் மூலம் கட்டணங்கள் செலுத்த முடியாதததால் அனைவரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
பகல் 12.56 மணி வரை 2,147 புகார்கள் பதிவாகியுள்ளன. 80 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களின் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து என்பிசிஐ இதுபற்றி நடவடிக்கை எடுத்து பிரச்னையை தீர்க்க முயன்றது. மாலையில் மீண்டும் யுபிஐ செயல்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am