
செய்திகள் மலேசியா
பிறப்பு, இறப்புக்கு மத்தியில் மதமாற்றப் பிரச்சினைகள் ஆலயங்களுக்கு பெரும் சவாலாக உள்ளன: ஓம்ஸ் தியாகராஜன்
கோலாலம்பூர்:
பிறப்பு, இறப்புக்கு மத்தியில் மதமாற்றப் பிரச்சினைகள் ஆலயங்களுக்கு பெரும் சவாலாக உள்ளன என்று ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.
மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இந்து ஆலயங்களுடனான அவசர சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
குறிப்பாக இந்து ஆலயங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இன்றைய நிகழ்வு நடைபெறுகிறது. இதுவொரு சிறப்பான முயற்சியாகும்.
என்னை பொறுத்தவரையில் நாட்டில் ஆலயங்கள் எல்லாம் சிறப்பான முறையில் உள்ளன.
ஆனால் ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் ஆலயங்களுக்கு வருகிறார்கள் என்பது தான் கேள்வியாகும்.
இந்திய சமுதாயத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே வேளையில் இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது.
இறப்பு, பிறப்பு விகிதத்திற்கு மத்தியில் மதமாற்றப் பிரச்சினையும் ஆலயங்களுக்கு பெரும் சவாலாக உள்ளன.
இதனால் கூட ஆலயங்களில் பக்தர்களின் எண்ணிக்கை குறையலாம்.
மேலும் இந்து மதத்தில் இருந்து மாறி வேறு மதங்களுக்கு செல்வது அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும்.
ஆனால் வேறு மதங்களுக்கு சென்று விட்டு இந்து மதத்தை தாக்குவது அநாகரிகமாகும்.
ஆக இதுபோன்ற விவகாரங்களில் மலேசிய இந்து சங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 7, 2025, 12:35 pm
ஆசியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி: அச்சத்தில் முதலீட்டாளர்கள்
April 7, 2025, 11:42 am
எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
April 7, 2025, 11:41 am
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்வு
April 7, 2025, 11:39 am
அமெரிக்கா விதித்த புதிய வரிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிபருடன் விவாதிக்கப்பட்டது: பிரதமர்
April 7, 2025, 11:38 am
பெண், சிறுவனை கத்தியால் குத்திய ஆடவர் குடியிருப்பாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்: போலிஸ்
April 7, 2025, 11:28 am
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு: கோலாலம்பூரில் நாளை விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது
April 7, 2025, 10:29 am