
செய்திகள் மலேசியா
ஆலயங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க மலேசிய இந்து சங்கம் பிரதமரிடம் மனு சமர்ப்பிக்கவுள்ளது
கோலாலம்பூர்:
ஆலயங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க மலேசிய இந்து சங்கம் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒரு மனுவைச் சமர்ப்பிக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கணேசன் கூறினார்.
மேலும், ஆலயங்கள் தொடர்பான பிரச்சனைகள், குறிப்பாக நிலம் தொடர்பான பிரச்சனைகளை முறையாகத் தீர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்து சங்க உறுப்பினர்களிடம் குறைகளைக் கேட்டு அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்ட பின் பிரதமரிடம் மனு சமர்ப்பிக்கப்படும் என்பதை கணேசன் தெரிவித்தார்.
சமீபத்திய ஆலய விவகாரத்தை ஒரு பாடமாகக் கருதி செயல்பட வேண்டும்.
அப்போதுதான் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் நடக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆக, ஆலயங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது குறித்த மனு பிரதமர் அலுவலக பிரதிநிதியிடம் பிற்பகல் 3 மணிக்கு இன்று சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 7, 2025, 12:35 pm
ஆசியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி: அச்சத்தில் முதலீட்டாளர்கள்
April 7, 2025, 11:42 am
எரிவாயு குழாய் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
April 7, 2025, 11:41 am
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்வு
April 7, 2025, 11:39 am
அமெரிக்கா விதித்த புதிய வரிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிபருடன் விவாதிக்கப்பட்டது: பிரதமர்
April 7, 2025, 11:38 am
பெண், சிறுவனை கத்தியால் குத்திய ஆடவர் குடியிருப்பாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்: போலிஸ்
April 7, 2025, 11:28 am
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு: கோலாலம்பூரில் நாளை விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது
April 7, 2025, 10:29 am