நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரின் ஸ்ரீ காடிங்கில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகின்றது 

ஜொகூர் பாரு:

பத்து பஹாட் அருகே உள்ள கம்போங் பஹாரு, ஸ்ரீ காடிங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை அதிகரித்துள்ளது.

அங்கு வெள்ளத்தால் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜொகூரின் ஸ்ரீ காடிங்கில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகின்றது. 

இன்று காலை 8 மணியளவில் அங்குள்ள 88 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜொகூர் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 

இதற்கிடையில், பத்து பஹாட்டிலுள்ள சுங்கை செங்காரங்கில் நீர் எச்சரிக்கை அளவை 3.37 மீட்டரை எட்டியுள்ளது.

அதே நேரத்தில் சுங்கை பத்து பஹாட்டில் 2.30 மீட்டராக எச்சரிக்கை நிலை உள்ளது.

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை வானிலை நன்றாக இருப்பதாகத் தெரிவிகப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset