நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஒற்றுமையின் வலுவான அடையாளமாக நோன்பு பெருநாள் திகழ்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

பன்முக கலாச்சாரம் சமூக ஒற்றுமையின் வலுவான அடையாளமாக நோன்பு பெருநாள் திகழ்கிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.

இந்த நாட்டை வடிவமைக்கும் பன்முகத்தன்மையின் மதிப்பையும், தங்களுக்குள் ஒற்றுமையின் உணர்வையும் மலேசியர்கள் பாராட்டுவதற்கான ஒரு  விழாவாக நோன்பு பெருநாள் விளங்குகிறது.

அனைத்து மலேசியர்களாலும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையின் உற்சாகம், அவர்களிடையே ஒற்றுமை, அன்பு, நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்தும்.

தீபாவளி, சீனப் புத்தாண்டு போன்றவற்றை நாம் கொண்டாடுவது போலவே, 

நமது பன்முக இன, பன்முக கலாச்சார சமூகத்தில் ஒற்றுமையின் வலுவான அடையாளமாக நோன்பு பெருநாள் திகழ்கிறது.

பன்முகத்தன்மையிலிருந்து பிறக்கும் வலிமையைப் பாராட்ட இது ஒரு இடம், மேலும் நாம் மடானி மலேசியா குடும்பமாக ஒன்று சேரும்போது அது எவ்வளவு அழகாக இருக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் தொடர்ந்து வளர்ப்பதற்கான வலுவான அடித்தளமாக இருப்பதால், அனைத்து இனங்களின் நலன்களுக்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது.

நாங்கள் விரும்பும் மலேசியாவின் அழகு இதுதான், அங்கு நாங்கள் அமைதியும் சாந்தமும் நிறைந்த சூழலில் ஒன்றாக வாழ்கிறோம். 

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset