
செய்திகள் உலகம்
சிவப்பு விளக்கு எரிந்தபோது சாலையைக் கடந்த பாதசாரிகளுக்கு அபராதம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சிவப்பு விளக்கு எரிந்தால் என்ன என்று மனம்போன போக்கில் சாலையைக் கடந்த 24 பாதசாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காவல்துறையினர் சோதனையில் சிக்கிய அனைவரும் 20 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள்.
இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை நடந்த சோதனையில் 24 பாதசாரிகள் சிக்கினர்.
இது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விவரம் கேட்டபோது, விருப்பம்போல சாலையைக் கடக்கும் பாதசாரிகள் தொடர்பான விபத்துகள் 23 விழுக்காடு அதிகரித்துள்ளதை காவல்துறையினர் சுட்டிக்காட்டினர்.
2023ல் 288ஆக இருந்த பாதசாரிகள் தொடர்பான சம்பவங்கள் 2024ல் 353க்கு அதிகரித்தது.
மார்ச் 24ஆம் தேதி ஃபேஸ்புக்கின் யுவர் ரோட்சென்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட படங்களில் பாதசாரிகளை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிடுவதைக் காண முடிந்தது.
சிவப்பு விளக்கு எரியும்போது சாலையைக் கடந்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை எச்சரித்தது.
சிவப்பு விளக்கின்போது சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு 50 வெள்ளி அபராதம் விதிக்கப்படுகிறது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am