நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர் 

சியொல்: 

தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

இந்த தகவலைத் தென்கொரியா அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் 

56 வயதான ஆடவர், கடந்த மார்ச் 22ஆம் தேதி தென்கொரியாவில் உள்ள வனப்பகுதியின் அருகே உடலைத் தகனம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். 

உய்சியோங் பிராந்தியத்தில் தனது பாட்டியின் உடலை தகனம் செய்தபோது அந்த தீ அங்குள்ள காட்டுப்பகுதியில் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த காட்டுத்தீ சம்பவத்தால் 4000 பரப்பளவு கொண்ட இடங்கள் யாவும் முற்றாக அழிந்தன. குறிப்பாக, கொவுன் ஆலயமும் இதில் அடங்கும் 

தென்கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ காரணமாக அமலாக்க துறையும் காவல்துறையும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset