நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்

பாங்காங்:

மியான்மாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது, 60 பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்துள்ளனர் என முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது.

மியான்மாரில், கடந்த மார்ச் 28ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மியான்மாரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கம், மியான்மார் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே நகரங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலநடுக்கத்தால் 2,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 1700க்கும் மேற்பட்டோர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, பல ஆயிரம் பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு, பலி எண்ணிக்கை பல மடங்கு உயரும் என, கணித்துள்ளது.

இந்நிலையில் மியான்மாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது, 60 பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்துள்ளனர் என முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது. 

இது குறித்து மியான்மார் முஸ்லிம் அமைப்பை சேர்ந்த துன் கீ கூறியதாவது: நிலநடுக்கம் ஏற்பட்ட போது 60 பள்ளிவாசல்கள் சேதம் அடைந்தன.

அப்போது நாடு முழுவதும் பல்வேறு பள்ளிவாசல்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தது. தொழுகையில் ஈடுபட்டு இருந்த 700 பேர் உயிரிழந்தனர். பழைய காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான மசூதிகள் மிகவும் சேதம் அடைந்தன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset