நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு நோற்காத முஸ்லிம்களுக்கு உணவு விற்ற பெண்ணுக்கு 5 நாட்கள் சிறை

செத்தியூ:

கடந்த வாரம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்காத முஸ்லிம்களுக்கு உணவு விற்றதாக ஒப்புக்கொண்ட ஒரு பெண்ணுக்கு செத்தியூ ஷரியா  நீதிமன்றம் ஐந்து நாட்கள் சிறைத்தண்டனையும் 2,000 ரிங்கிட் அபராதமும் விதித்தது.

குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் 38 வயதான பெண் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.

இதனை அடுத்து ஷரியா நீதிமன்ற நீதிபதி மாட் ரோபி புசு  இந்த தண்டனையை விதித்ததாக திரெங்கானு ஷரியா அமலாக்க அதிகாரி தலைவர் ஹைசி சைடி தெரிவித்தார்.

அப்பெண் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தி மார்ச் 28 வரை கிளந்தானில் உள்ள பெங்கலன் சேபா பெண்கள் தடுப்பு மையத்தில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

அந்தப் பெண் மீது 2001 ஆம் ஆண்டு திரெங்கானு ஷரியா குற்றவியல் குற்றச் சட்டத்தின் பிரிவு 19(ஏ) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset