
செய்திகள் மலேசியா
மாணவர்கள் பள்ளி சீருடையில் ஜாலூர் கெமிலாங் சின்னம் அணிய வேண்டும்: அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது
கோலாலம்பூர்:
அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளி சீருடைகளில் ஜாலூர் கெமிலாங் கொடியின் சின்னத்தை அணிய வேண்டும்.
இந்த நடைமுறை அடுத்த மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கல்வித்துறையின் தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் கூறினார்
ஜாலூர் கெமிலாங் கொடி கொண்ட சின்னத்தை மாணவர்கள் தங்களின் பள்ளி சீருடையின் வலதுப்புறத்தில் அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்
அனைத்து அரசாங்க பள்ளிகள், அரசாங்க உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்விக் கூடங்களில் இந்த நடைமுறை செயலாக்கம் காணவுள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
ஜாலூர் கெமிலாங் கொடி சின்னத்தை மாணவர்களின் அணிவதன் மூலம் நாட்டை நேசிக்கவும் சமூக நல்லிணக்கத்தை மேலோங்க செய்யவும் இது வழிவகுக்கும் என்று அமைச்சு எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்
பள்ளி மாணவர்களிடையே நாட்டுப்பற்றை விதைப்பதில் கல்வியமைச்சு முனைப்பு காட்டி வருவதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்று அஸ்மான் விளக்கம் அளித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm