
செய்திகள் மலேசியா
கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகளை சுங்கத்துறை பறிமுதல் செய்தது
பட்டர்வொர்த்:
அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகளை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
அரச மலேசிய சுங்கத் துறையின் இயக்குநர் ரொஹைசைத் அலி இதனை கூறினார்.
கடந்த மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் பெராயில் உள்ள தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சோதனைகள் நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
குறிப்பாக அனுமதியின்றி கடத்தும் ஒரு கும்பலையும் சுங்கத் துறை கண்டுபிடித்தது.
அமலாக்கப் பிரிவின் செயல்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு நடத்திய சோதனையில், 1,332 அட்டைப்பெட்டிகள் அல்லது 28,780 கிலோ பட்டாசுகள், பல்வேறு பிராண்டுகளின் பட்டாசுகள் அனுமதியின்றி ஏழு கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm