நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம் கண்டுபிடிப்பு

லண்டன்:

இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த மார்ச் 10-ஆம் தேதி பவுலா மற்று்ம டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியிலுள்ள கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

அங்குத் தேவதை போன்ற எலும்புக்கூடு இருப்பதாகக் கண்டு, அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

புகைப்படங்களின் படி மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்ட மர்ம உயிரினம் காணப்படுகிறது.

இது ஒரு மீனின் வால், வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.

கடற்பகுதிகளில் விசித்திரத் தோற்றமுடைய பொருள் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது இது முதல் முறை அல்ல.

கடந்த மாதம், ரஷிய மீனவர் கடலின் ஆழத்திலிருந்து ஒரு விசித்திரமான, இதுவரை கண்டிராத உயிரினத்தைப் பிடித்தார்.

இது சமூக ஊடகங்களில் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset