
செய்திகள் மலேசியா
இனங்களுக்கு இடையிலான மோதல்களும் சண்டைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா:
இனங்களுக்கு இடையிலான மோதல்களும் சண்டைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தகைய செயல்கள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு முரணானவை என்று பிரதமர் குறிப்பிட்டதாக, அவரின் மூத்த பத்திரிக்கைச் செயலாளர் துங்கு நஸ்ருல் அபைடா தெரிவித்தார்.
‘ஒரு நாகரிகமான நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரும் பரஸ்பர மரியாதை கொள்கையைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தால், இன, மத மற்றும் தேசிய உணர்வுகளைப் பாதிக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் என்று மதிப்பிற்குரிய பிரதமர் நம்புகிறார்,” என அவர் கூறினார்.
மலேசிய பிரதமர் அலுவலகம் மற்றும் அன்வார் இப்ராஹிமின் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட, பிரதமர் அலுவலகத்தின் தினசரி விளக்கமளிப்பில், துங்கு நஸ்ருல் அதனைத் தெரிவித்தார்.
தமக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பும் ஒரு சில தரப்பினரின் செயல்கள் மிகக் குறைந்த ஒழுக்கத்தைக் கொண்டவை மற்றும் அவை இஸ்லாம் மத்தத்தால் தடைசெய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறியதாக அவர் விளக்கினார்.
அவதூறுகளைப் பரப்பி பொதுமக்களைக் கவர முயற்சிக்கும் சில தரப்பினரின் விரக்தியை அது காட்டுவதாக அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm