
செய்திகள் மலேசியா
அமைதியான ஒன்றுக்கூடலுக்கு அழைப்பு விடுப்பது தவறல்ல: அருண் துரைச்சாமி
கோலாலம்பூர்:
மத போதக பேச்சாளர் ஜம்ரி வினோத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்த சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அழைப்பு விடுத்ததற்காக, அருண் துரைச்சாமி இன்று மாலை புக்கிட் அமான் காவல் நிலையத்தில் விளக்கம் அளித்தார்
பின்னர் காவல் நிலைய தலைமையகத்தின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அருண் துரைசாமி, சட்ட அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகளைப் பற்றி பேசுவதற்கும், அமைதியான கூடுதலுக்கு அழைப்பு விடுப்பதற்கும் தனக்கு அரசியலமைப்பு உரிமை உள்ளதாகக் கூறினார்.
“சட்ட அமலாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், எங்களுக்கு போராட்டம் நடத்த உரிமை உள்ளது.
“அது அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட எனது உரிமையாகும். 2012 ஆம் ஆண்டு அமைதியான கூடுதல் சட்டத்தின்படி இது கலகத்தைத் தூண்டுவதாகாது,” என்று அவர் கூறினார்.
அந்த வீடியோவை வெளியிட்டதற்கு வருத்தம் இல்லை என்றும், இந்துக்களின் விரக்தியை வெளிப்படுத்தவே அது பதிவிடப்பட்டதாகவும் அருண் துரைச்சாமி தெரிவித்தார்.
இந்து காவடி முறையை ஏளனம் செய்த ஜம்ரியின் கூற்றுக்கு எதிராக இம்மாத இறுதிக்குள் குற்றவியல் வழக்கு தொடரவும், இது குறித்து பேரரசரை சந்திக்க கோரிக்கை விடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 4:32 pm
பொது மருத்துவர்களுக்கான கூடுதல் கட்டணத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது: சுகாதார அமைச்சர்
March 14, 2025, 4:24 pm
பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டுள்ளது: ஜாஹித்
March 14, 2025, 1:02 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு மலாக்கா மாநில அரசு RM400,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: ராவூப் யூசோ
March 14, 2025, 12:30 pm
தற்காப்பு மீட்புப் படை பெண் வீராங்கனைகள்: 4 மீட்டர் நீளமான ராஜநாகத்தை வெற்றிகரமாக பிடித்தனர்
March 14, 2025, 12:29 pm