
செய்திகள் மலேசியா
விமான நிலையத்தில் நண்பரின் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாக பேசிய முதியவருக்கு 100 ரிங்கிட் அபராதம்
பாலேக் பூலாவ்:
விமான நிலையத்தில் நண்பரின் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாக பேசிய முதியவருக்கு 100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் நண்பரின் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கைதான அவர் பொது ஒழுங்கை சீர்குலைத்த குற்றச்சாட்டில் பாலேக் பூலாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு 100 ரிங்கிட்அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றச்சாட்டின்படி 64 வயதான இங் கோக் இயோவ் தனது நண்பரின் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக மலேசிய ஏர்லைன்ஸ் ஊழியருக்குத் தெரிந்தே தகவல் அளித்ததாகவும்,
அந்த வார்த்தைகள் பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதை குற்றம் சாட்டப்பட்டவர் அறிந்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 5:49 pm
அமைதியான ஒன்றுக்கூடலுக்கு அழைப்பு விடுப்பது தவறல்ல: அருண் துரைச்சாமி
March 14, 2025, 4:32 pm
பொது மருத்துவர்களுக்கான கூடுதல் கட்டணத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது: சுகாதார அமைச்சர்
March 14, 2025, 4:24 pm
பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டுள்ளது: ஜாஹித்
March 14, 2025, 1:02 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு மலாக்கா மாநில அரசு RM400,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: ராவூப் யூசோ
March 14, 2025, 12:30 pm
தற்காப்பு மீட்புப் படை பெண் வீராங்கனைகள்: 4 மீட்டர் நீளமான ராஜநாகத்தை வெற்றிகரமாக பிடித்தனர்
March 14, 2025, 12:29 pm