
செய்திகள் உலகம்
விமானத்தில் துப்பாக்கியுடன் நுழைய முயன்றவரை மடக்கிப் பிடித்த பயணிகள்
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் விமானத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முனைந்ததாகச் சந்தேகிக்கப்படும் இளையரைப் பயணிகள் மடக்கினர்.
நேற்று (6 மார்ச்) மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள அவலோன் விமான நிலையத்துக்கு 17 வயது இளையர் துப்பாக்கியுடன் வந்ததாகக் கூறப்படுகிறது.
நிலையத்தைச் சுற்றியுள்ள வேலியில் இருந்த ஓட்டை வழி இளையர் நுழைந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
அவர் பின்னர் சிட்னிக்குப் புறப்படவிருந்த Jetstar விமானத்துக்குள் நுழைய முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
விமானத்தில் ஏற்கெனவே 160 பேர் இருந்தனர்.
துப்பாக்கி ஏந்திய ஒருவர் விமானத்தை நெருங்குவதைக் கண்ட சிலர் உடனடியாக அவரை மடக்க விரைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
காவல்துறையினர் இளையரைத் தடுத்து வைத்தனர்.
இளையரைக் கட்டுப்படுத்தியதாக நம்பப்படும் குறைந்தது மூவரைக் காவல்துறையினர் பாராட்டினர்.
இளையர் தனியாகச் செயல்பட்டதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
அவர் துப்பாக்கியுடன் என்ன செய்ய நினைத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am