நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உண்மை எண்ணிக்கை என்ன? முப்பதா அல்லது மூன்றாயிரமா?: எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி

புது டெல்லி: 

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலால் உயிரிழந்தர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளயிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின.

மக்களவையல் இதுதொடர்பாக பேசிய நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, கும்பமேளா உயிரிழப்புக்கு யார் பொறுப்பேற்பது. அரசியலும், மதமும் இணைந்தால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

கும்பமேளாவில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உண்மையான தகவல் தெரிவிக்கப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையும், அரசு நிர்வாகத்தில் பட்டியினத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார் அவர்.

சமாஜவாதி கட்சியின் எம்பி ஜெயாபச்சன், உயிரிழந்த ஏராளமான பக்தர்களின் உடல்கள் யமுனையில் தூக்கி வீசப்பட்டன என்று குற்றம்சாட்டினார்.

குறைந்தது 3000 பேர் உயிரிழந்திருக்கலாம். யோகியின் அரசு அதனை மூடி மறைக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset