
செய்திகள் இந்தியா
மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உண்மை எண்ணிக்கை என்ன? முப்பதா அல்லது மூன்றாயிரமா?: எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி
புது டெல்லி:
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலால் உயிரிழந்தர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளயிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின.
மக்களவையல் இதுதொடர்பாக பேசிய நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, கும்பமேளா உயிரிழப்புக்கு யார் பொறுப்பேற்பது. அரசியலும், மதமும் இணைந்தால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.
கும்பமேளாவில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உண்மையான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையும், அரசு நிர்வாகத்தில் பட்டியினத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார் அவர்.
சமாஜவாதி கட்சியின் எம்பி ஜெயாபச்சன், உயிரிழந்த ஏராளமான பக்தர்களின் உடல்கள் யமுனையில் தூக்கி வீசப்பட்டன என்று குற்றம்சாட்டினார்.
குறைந்தது 3000 பேர் உயிரிழந்திருக்கலாம். யோகியின் அரசு அதனை மூடி மறைக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am