செய்திகள் இந்தியா
மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உண்மை எண்ணிக்கை என்ன? முப்பதா அல்லது மூன்றாயிரமா?: எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி
புது டெல்லி:
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலால் உயிரிழந்தர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளயிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின.
மக்களவையல் இதுதொடர்பாக பேசிய நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, கும்பமேளா உயிரிழப்புக்கு யார் பொறுப்பேற்பது. அரசியலும், மதமும் இணைந்தால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.
கும்பமேளாவில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உண்மையான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையும், அரசு நிர்வாகத்தில் பட்டியினத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார் அவர்.
சமாஜவாதி கட்சியின் எம்பி ஜெயாபச்சன், உயிரிழந்த ஏராளமான பக்தர்களின் உடல்கள் யமுனையில் தூக்கி வீசப்பட்டன என்று குற்றம்சாட்டினார்.
குறைந்தது 3000 பேர் உயிரிழந்திருக்கலாம். யோகியின் அரசு அதனை மூடி மறைக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 10:47 pm
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: இன்று காலை வாக்குப்பதிவு துவங்குகிறது
February 4, 2025, 1:07 pm
அமெரிக்காவில் வசித்த இந்தியக் கள்ளக்குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க விமானம் புறப்பட்டது
February 4, 2025, 12:45 pm
சீனா தொழில்துறையில் இந்தியாவைவிட 10 ஆண்டுகள் முன்னிலையில் உள்ளது: ராகுல் காந்தி
February 4, 2025, 10:52 am