நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வங்கி ATM-இல் விதிக்கப்படும் 1 ரிங்கிட் கட்டணத்தை  அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

வங்கி ஏடிஎம்மில் விதிக்கப்படும் கட்டணமான 1 ரிங்கிட்டை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசு சாரா அமைப்பான நம்பிக்கை இயக்கத்தின் தலைவர்  டத்தோ கலைவாணர் வலியுறுத்தினார்.

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் மக்கள் வங்கி கணக்குகளை கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் அம் மக்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது 1 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுகிறது.

வங்கியில் உள்ளது நமது பணம். அதை மீட்பதற்கு எதற்கு 1 ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

இந்த 1 ரிங்கிட் கட்டணத்தால்  கிட்டத்தட்ட 544 மில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டப்படுகிறது.

இதில் 271 மில்லியன் ரிங்கிட் மட்டும் லாபமாக ஈட்டப்படுகிறது. இந்த பணம் இருந்தால் மக்களுக்கு பல நலத் திட்டங்களை மேற்கொள்ளலாம்.

அதே வேளையில் இது மக்களின் பணமாகும். அப்பணத்தால் மக்களுக்கு தான் பயன் பெற வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் கோவிட் காலத்தில் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதி இந்த கட்டணத்தை ரத்து செய்தார்.

ஆகவே இந்த கட்டணத்தை ரத்து செய்ய கோரி தேசிய வங்கி பணியாளர்கள் சங்கம் கையெழுத்து வேட்டையை தொடங்கியுள்ளனர்.

www.Change.org  எனும் அகப்பக்கத்தில் இந்த  கையெழுத்து வேட்டைக்கான மனு உள்ளது. ஆகவே மக்கள் இம்முயற்சி முழு ஆதரவை தர வேண்டும்.

அதே வேளையில் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். இதுவே எங்களின் கோரிக்கை என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset