நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி

புத்ராஜெயா:

குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி சுக்ரி இதனை தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் நிரந்தர, இடைக்கால உத்தரவுகளைத் தொடர்ந்து ஐந்து பிள்ளைகள் தகுதிவாய்ந்த, பொருத்தமான நபர்களின் பராமரிப்பில் வைக்கப்பட்டது.

மேலும் 107 குழந்தைகள் எட்டு சமூக நலத்துறை நிறுவனங்களில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தங்கள் குழந்தைகளை பெறுவதற்கள் சில பெற்றோர்கள் வழக்குத் தொடர திட்டமிட்டனர்.

ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.


அமைச்சு இன்னும் காவல்துறை அறிக்கை மற்றும் சட்ட நடைமுறைகளுக்காகக் காத்திருந்ததால் குழந்தையை ஒப்படைக்கவில்லை. 

ஆனால் செயல்முறை முடிந்ததும், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset