நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு: அமைச்சர் கைரி தகவல்

கோலாலம்பூர்:

கிள்ளான் பள்ளத்தாக்கு, சரவாக்கில் கொரோனா தொற்றுப் பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இத் தகவலை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் இன்று தெரிவித்தார்.

கடந்த ஏழு நாள்களாக இந்த எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கிள்ளான் பள்ளத்தாக்கில் 22 விழுக்காடாகவும், சரவாக்கில் 16 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர்.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2,407,382 ஆகும். தற்போது அன்றாட பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 6 ஆயிரமாகப் பதிவாகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset