செய்திகள் மலேசியா
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள பாழடைந்த வணிகப் பகுதிகளை மேம்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள பாழடைந்த வணிகப் பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் ஜாலான் மஸ்ஜித் இந்தியா சுற்றுப்பகுதிகளை அவர் பார்வையிட்டார்.
மேலும், ஜாலான் மஸ்ஜித் இந்தியா பல ஆண்டுகளாக ஒரு சுற்றுலா தலமாக விளங்கிய நிலையில், அங்குள்ள பல வணிகப்பகுதிகள் மோசமான நிலையில் பாழடைந்து காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா அதிக போக்குவரத்து நிறைந்த பகுதி என்றும் கூடிய விரைவில் சுற்றியுள்ள வணிகப் பகுதிகளையும் கடைகளையும் மேம்படுத்தும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
- கௌசல்யா ரவி
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 11:09 pm
S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்
November 5, 2025, 8:53 pm
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
November 5, 2025, 8:15 pm
ஆலயங்களுக்கான தர்ம மடானி திட்ட விண்ணப்பத்திற்கான காலக் கெடு நவம்பர் 19 வரை நீட்டிப்பு: மித்ரா
November 5, 2025, 3:29 pm
தைவானின் செல்வாக்கு மிக்க பெண் கொலை வழக்கில் நாம்வீக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்
November 5, 2025, 1:16 pm
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
November 5, 2025, 12:53 pm
61 மலேசிய மாணவர்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு: சுற்றுலா முகவர் மீது போலிஸ் விசாரணை
November 5, 2025, 10:35 am
