செய்திகள் மலேசியா
மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலுக்கு வருகை தந்த முதல் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தான்: முஹம்மது காதிர் அலி
கோலாலம்பூர்:
தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலுக்கு வருகை தந்த முதல் பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திகழ்கிறார்.
கெபிமாவின் ஆலோசகர் முஹம்மது காதிர் அலி இதனை கூறினார்.
மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அடையாளமாக மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் விளங்குகிறது.
இப்பள்ளிவாசலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வர வேண்டும் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்தாண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபின் அவர் இங்கு வருவதாக உறுதி அளித்தார். ஆனால் அதற்குள் இப்பகுதியில் நிகழ்ந்த அசம்பாவிதத்தால் அவரின் வருகை தள்ளிப்போனது.
இந்நிலையில் அவர் இன்று மஸ்ஜித் இந்தியாவிற்கு வருவதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
இப் பள்ளிவாசலுக்கு பெர்லிஸ் சுல்தான், சுல்தான் சிராஜுடின் மாமன்னராக இருந்த போது வருகை தந்தார்.
அதன் பின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப் பள்ளிவாசலுக்கு வருகை தந்துள்ளார். மேலும் இப்பள்ளிவாசலுக்கு வருகை தந்த முதல் பிரதமரும் அவர் தான்.
பிரதமரின் வருகை மலேசிய இந்திய முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 11:20 pm
தர்ம மடானி திட்டம்; சமூக ஒற்றுமைக்கும் எதிர்கால நலனுக்கும் குணராஜ் முன்வைத்த அறைகூவலுக்கு மாமன்றம் ஆதரவு
November 4, 2025, 3:21 pm
அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அரசாங்கம் ஏஜிசியுடன் கலந்தாலோசித்தது: பிரதமர்
November 4, 2025, 3:20 pm
எம்ஏசிசியின் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடர இல்ஹாம் கோபுர நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி
November 4, 2025, 3:18 pm
கைரி விவகாரம் குறித்து அம்னோ விவாதிக்கவில்லை; ஆனால் ஊடக அறிக்கைகளுடன் நான் முரண்படவில்லை: ஜாஹித்
November 4, 2025, 3:17 pm
பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 கார்கள் சேதமடைந்தன
November 4, 2025, 11:30 am
நாளைக்கு நீ சாகணும்னு நான் ஆசைப்படுறேன்
November 4, 2025, 9:54 am
பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம்; முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சு
November 4, 2025, 8:00 am
டபள்யூசிஇ திட்டம்: 19 நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
November 4, 2025, 7:52 am
