செய்திகள் தமிழ் தொடர்புகள்
மாநில உரிமைகளை பறிக்கும் யுஜிசியின் முடிவு கண்டனத்திற்குரியது: பேராசிரியர் ஜவாஹிருல்லா
சென்னை:
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையம் ஆகிய யூஜிசி வெளியிட்டுள்ளது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான மாநில அரசின் உரிமைகள் முற்றாக பறிக்கப்பட்டுள்ளன. இது கடும் கண்டனத்திற்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.
தேடுதல் குழுவும் நியமன பொறுப்பும் மாநில ஆளுநரையே சார்ந்தது என்று இந்த விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இது மிகுந்த வேதனைக்குரியது. கடுமையான கண்டனத்துக்குரியது என்று அவர் மேலும் கூறினார்.
கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் காலத்தில் கல்வியில் மாநில உரிமைகளை முற்றாகப் பறிக்கின்ற அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை ஒன்றிய அரசின் கைப்பாவையாக இருந்து யுஜிசி மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையம் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆகிய மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.
அந்த காரணத்திற்காகவே யுஜிசிஐ அழிக்க வேண்டும் என்ற மதவாத நோக்கில் செயல்பட்டுவந்த ஒன்றிய பாஜக அரசு இப்பொழுது யுஜிசி யின் வாயிலாகவே மாநில உரிமைகளை பறிக்க முற்படுவது நகைமுரணாக தோன்றுகிறது .
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கின்ற முழு அதிகாரமும் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்று நெடுங்காலமாக மமக வலியுறுத்தி வருகிறது.
மாநில உரிமைகளைப் பறிக்கும் மாற்றங்கள் எவற்றைச் செய்தாலும் தமிழ்நாடு கொதிகலனாக மாறும் என்பது தவிர்க்க முடியாததாகும்.
உயர்கல்வியில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விட முதல் நிலையில் இருக்கும் தமிழ்நாட்டில் உயர் கல்வி கட்டமைப்பை சிதைக்கின்ற வகையிலான மாற்றங்களை ஒன்றிய அரசின் கைப்பாவை ஆகிய யூஜிசி கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த மாற்றங்கள் உடனடியாக கைவிடப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 4:17 pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை: விஜய் அறிவிப்பு
January 17, 2025, 11:55 am
காணும் பொங்கலில் சுற்றுலா தலங்களில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்
January 16, 2025, 9:51 pm
தமிழ் பாரம்பரிய மாதம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
January 15, 2025, 5:57 pm
தமிழறிஞர்களுக்கு அரசின் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
January 15, 2025, 12:53 pm
கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
January 15, 2025, 12:17 pm
1,000 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு அனல் பறக்க நடந்து வருகிறது
January 14, 2025, 7:15 pm
களைகட்டியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
January 14, 2025, 1:01 am
தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: த வெ கழகத் தலைவர் விஜய்
January 12, 2025, 11:08 pm