நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர வாஞ்சையோடு பழகி வாழும் முதன்மையான மாநிலம் தமிழகம்: மதுரையில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

மதுரை:

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலில், எல்லீஸ் நகர் பகுதி திமுக  சார்பில்  நேற்று நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு  விருந்தினராக மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல்,ம் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

தனது முன்னோர்கள் வழியில் மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கத்தைப்  பாதுகாப்பதில் தானும் உறுதியோடு இருப்பதை தமது சிறப்புரையில் அமைச்சர் பதிவு செய்தார். 

May be an image of one or more people and text

அனைவரையும் அரவணைக்கும் முதன்மை மாநிலம் தமிழகம் என்று அவர் கூறினார். இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும் ஒற்றுமையோடு சகோதர வாஞ்சையோடு பழகி வாழ்கிறார்கள் என்று அவர் கூறினார்.

May be an image of one or more people, dais, temple and text

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ., துணை மேயர் திரு. நாகராஜன்,மாமன்ற உறுப்பினர் திருமிகு செல்வி செந்தில், திமுக பகுதி செயலாளர் திரு.  பி.கே.செந்தில், வட்ட செயலாளர் திரு. பி.கே.சுரேஷ்,, ஜமாத் தலைவர் திரு. நிஜாம் அலிகான், பல்வேறு கூட்டணிக் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள், அருட்தந்தை  ஜோசின், அர்ச்சகர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset